முள்ளிவாய்க்கால் கஞ்சி
“உலக ஒழுங்கைப் பலம்தான் நிர்ணயிக்கின்றது” என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக எமது பலத்தை நாங்கள் உலகத்திற்க்கு காட்டவேண்டிய காலம் இது.
முள்ளிவாய்க்காலில் குறிப்பிட்ட நிலப்பரப்பில் எமது இனம் உலக நாடுகளின் துனையுடன் முற்றாக அழிக்க முற்பட்டது இலங்கை அரசாங்கம்.
ஆனால் எமது மக்கள் பட்டினியால் சாகக் கூடாது என்பதற்காக கஞ்சியை சாப்பிட்டு உயிரைக் காத்தனர்.
எமது இனம் பட்ட துன்பத்தை எந்தக் காலத்திலும் மறக்கக் கூடாது.உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் காலை உணவாக “கஞ்சி”யை சமைக்க வேண்டும்.தங்கள் பிள்ளைகளுக்கு முள்ளிவாய்க்காலில் எமது இனம்பட்ட துன்பங்களையும் இலங்கை இரானுவம் செய்த அட்டூழியங்களையும் எடுத்துக் எடுத்துக் கூறவேண்டும்.
உலகத்தில் தமிழர்கள் அறிவிலும் ,வீரத்திலும் பலமானவர்கள் என்பதே எமது போராட்ட வளர்ச்சியின் உச்சம். எமது இனத்தின் உரிமையை வெல்வதில் மிகப்பெரும் பங்கு புலம்பெயர் இளையோரின் கையில் தங்கியுள்ளது.
2008 ஆம் ஆண்டு கடைசி மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் கூறியதாவது “ புலம்பெயர் இளையோர்களே உங்கள் வேலைத்திட்டங்களை வேகம்படுத்துங்கள்” எனவே முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் காலை உணவாக காஞ்சியை சமைத்து பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்களை எமது இலக்கு நோக்கி செல்வதற்க்கு தயாராகுங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் எமது இனத்தின் அறிவுப் பலத்தை காட்ட இன்றே தயாராகுங்கள் இளையோர்களே.
தமிழர்களின் அறிவுப் பலத்தால் எமது தாயக பூமியை வென்றெடுக்க இன்றைய நாளில் உறுதி எடுப்போம்.
எழுத்து
வதனன்