காட்டிக்கொடுத்த எட்டப்பன் கூட்டத்தால்..
சொந்த மண்ணிலே… செத்து மடிந்தன உயிர்கள்…!!
கொத்துக் கொத்தாய்க் போட்ட குண்டில்,
பிஞ்சுக் குழந்தையெல்லாம்
மண்ணோடு புதையுண்டது……….!
காப்பாற்ற முடியவில்லையே என…
கதறி அழுதோம் நாம்…!
கேட்பாரற்று நாங்கள்
துடித்த வேளையில்….
ஊமையான சர்வதேசம்…
போலியான மனிதநேயம்…
அண்டை நாடுகள் கைகட்டி
வேடிக்கை பார்க்க…
குள்ள நரிக்கூட்டங்களும்…
வல்லூறுகளும் வட்டமிட…
உரிமைகேட்டு…. உயிரைக் கொடுத்து,
எழுந்து நின்ற போராட்டம்!
கூடி இருந்தே குழிபறித்தவர்களால்….
முள்ளிவாய்க்கால் மண்ணிற்குள்
புதையுண்டு போனது…
மண்ணில் புதைந்தோம்..,
மீண்டும் எழுவோம்,,,
பீனிக்|ஸ் பறவையாய் !
நாம் சிந்திய குருதியில்…
சிரிக்கும் அழகான பூக்கள்….
சுதந்திரக் காற்றில்….
எங்கள் மண்ணும்,
நிச்சயம் ஒருநாள்….
குளிக்கும்
அப்போது உரத்து சொல்வோம்
இந்த உலகிற்கு… நம் தலைவனும்..
வீரர்களும் கண்ட கனவு
பலித்ததென்று…..
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்..