காவல்தெய்வங்களை
கைதொழ வாருங்கள்………..
காவல் தெய்வங்களை
கைதொழ வாருங்கள்
குலதெய்வங்களை
கும்பிட வாருங்கள்
கோபுரதீபங்களை
போற்றிப்பாட வாருங்கள்
காவியத்து நாயகரின்
காவியம் பாடுங்கள்
கல்லறைத் தெய்வங்களை
கண்ணில் நிறுத்தி
நெஞ்சில் அவர் தியாங்தனை
நினைவுகூருங்கள்
தாய்பாலோடு
தமிழ்வீரத்தையும் ஊட்டிய
தாய் வருவாள்
தந்தை வருவார்
அக்கையும் தங்கையும்
வருவார்கள்
அண்ணனும் தம்பியும்
வருவார்கள் என
காத்திருக்கிறோம்
பள்ளித்தோழர் வருவார்
ஒன்றாய் களமாடிய
போர்வீரர் வாருவார்
நாம் உயிராய் நேசித்த
தேசத்தலைவன் வாருவான்
காத்திருக்கிறோம்
கல்லறைக்குள்ளே
கனவுகளுக்கு உயிர்கொடுத்தபடி
இம்முறை எங்களுக்காய்
என்ன கொண்டு வருவீர்கள்
எங்கள் கனவுகளை
வென்று தருவீரோ
இம்முறையும் வழமைபே ால்
கல்லறையில் சுடரேற்றி
பூத்தூவி
அந்தப் பாடலைப் பாடிச்
செல்லப்போகிறீர்களா!
உங்கள் வருகையை எண்ணி
எதிர்பார்த்திருக்கிறோம்
எங்கள் கனவுகளை
என்று வென்றுதருவீர்
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.