பொருமிய மனதுடன் புதையுறு குழிகளில் பூக்களை விதை விதைத்தோம் சூழவும் சிங்களம் சுட்டிட துடிக்கையில் யார் கையை தொட்டு நிற்போம் வெங்களம் யாவிலும் வீரத்தை காட்டிய வேழத்தை காத்திடு என்றோம் வாழவே முடியாத நிலையினில்
சாவரினும் தளரோம் யார்வரினும் பணியோம் வெந்துதணியாது வீரநிலம் …! கார்த்திகைமாதம் வேர்த்தறியாக்காலம். மேகமுந்தானை விலக்கி வானத்தாய் பூமிக்குப் பால்கொடுப்பாள். வேர்கள் விருட்சத்துக்கு விருந்தளிக்கும். நீரும் நிலமும் கலந்திளகி பூமிப்பெண் புத்தாடை புனைவாள். ஆயிரம் காணவேண்டும் அதைக்காண. ஊரின்
சிதைக்காதே! சிதையாதே! உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் ஒற்றைச்சொல் மாவீரர்! அழகுத்தமிழை அரியணையிலேற்றி உயரிய வாழ்வினை உவந்தளித்தவர் மாவீரர்! சருகாய் காய்ந்து மெலிந்து காலில் மிதிபட்டு வீழ்ந்த தமிழை விதையாய் வீழ்ந்து துளிர்த்து நிமிர்த்திக்காட்டியவர் மாவீரர்! நெருப்பு மழையுக்குள் எதிரியின் செருக்குடைத்து உரிமைப்போரின் உயிர்விளக்காய் எரிபவர்கள் மாவீரர்! சாவின் நேரம் தெரிந்தும் சற்றும் தளராது சாதித்துக்காட்டி விடுதலையின் சாரதிகளாய் சத்திய இலட்சியப் பாதையில் சந்ததிகளின் நித்திய வாழ்வின் நிம்மதிக்காய் கூட்டிச்செல்பவர்கள் மாவீரர்! இத்தனையும் இதயத்தின் ஆழத்தில் பசுமரத்தாணியாய் பதிந்து இருப்பதால்த்தான் எங்கள் மாவீரக்கோவில்களை எதிரியானவன் கிலிகொண்டு தகர்த்தான்! அவர்கள் கல்லறைகளை சிதைத்தான்! ஆனால்? எங்கள் நெஞ்சறையை அவனால் சிதைக்க முடியவில்லை! மாறாக வஞ்சம் கொண்ட மாந்தரின் வறட்டுக்கௌரவத்தில் புலத்திலும் எங்கள் மாவீரர் கோவில்களை சிதைக்க
விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம்
மாவீரச் செல்வங்களே. உங்களின் கல்லறைகள் கூட பகைவனைப் பயமுறுத்தும்...! தியாகத்தின் சிகரங்கள் வீர யாகத்தின் அகரங்கள். காற்றோடு கலந்தவர்கள் வீர காவியம் ஆனவர்கள் நெருப்பாற்றில் குளித்தவர்கள் வரலாற்றில் நிலைத்தவர்கள். மரணத்தை வென்ற மாவீரர். தமிழ் மானத்தைக் காத்த
கருவறைத் தோழன் கல்லறையில் உறங்குகிறான்.. உடல்கள் வேறாகி உணர்வுகளால் ஒன்றானோம் தோழமை எனும் உறவில் ஒருவர் விரலை ஒருவர் இறுகப்பற்றி நடக்கப் பழகிய நாள்முதலாய் சகோதரர்கள் ஆனோம் பள்ளியில் பருவமதில் சேட்டைகள் பல புரிந்து மாட்டிக் கொண்டதும் இருவரும் சேர்ந்தே தலைமை வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியதும் இலைக்கஞ்சிக்காய் வரிசையில் முந்தியடித்து வழுக்கி
மரணத்தை வென்றவர்... வலிகள் நிறைந்த விடலைகள் நாங்கள் . படலைகள் திறந்து நடக்கிறோம். களங்களை நோக்கி. சிறைகளை உடைத்துப் படைபல திரட்டி தடைகளை உடைக்கிறோம் மரணத்தை வென்று மகுடத்தைக் கொண்டு மறுபடி அமைக்கிறோம் தமிழ் அரசு வீழ்ந்தவர் எல்லாம் தாழ்ந்தவர் கிடையாது மரணத்தை
தோழி உன் நினைவுடன்... தோழி..! கல்லறை மீதில் காத்திருக்கும் உனை காண என்னால் வரமுடியவில்லை. எனிலும்.. உனக்கு பிடித்த மல்லிகை பூவில் மாலை தொடுத்து அனுப்பி விடுகின்றேன் ஏற்றுவிடு... படுக்கை புண்ணுடன் பல பிரச்சினைகள் எனக்கு. நாற்காலியில் கூட அமர முடியாத அவல நிலை. என்ன செய்வது.. விடுதலை
மாவீரர் துணையோடு தேசப்பணி தொடர்வோம்....! மறைந்தன நேற்றோடு பாடுகள் மலர்ந்தன இனிதே வசந்மென்றே பாடுகுயிலே கடமைகள் கண்ணெதிரே எழுந்தன இலட்சியக் கனவுகள் துளிர்விட்டன இனி புறப்படுவே ாம் மனதில் உறுதிபூண்டு உரிமை வெல்ல இந்த வருடம்........... தலைவனின் வருகை இருந்திடல் வேண்டும் தமிழர் தலைகள் நிமிர்ந்திடல் வேண்டும் புலிகள் படையெடுப்பு நிகழ்ந்திடல் வேண்டும் புனிதர் கனவுகள் மலர்ந்திடல்
உங்கள் உயிர் முகம் தேரில்வரும் கண்ணீரின் கோலங்கள் ஈழ கார்த்திகையின் வாசலில், ஏற்றிய தீபங்கள்.. நினைவுகள் வந்து எரியுது எம் நெஞ்சினில் தமிழுக்கென்று தேசம் காண ஊர்மடியில் உருவெடுத்தீர், உரிமை வெல்லவே உணர்வுக்கு உயிர்கொடுத்தீர் நோக்கத்தை பற்றவைத்து, தேகத்தை எரிமலையில்