மதியால் மரணத்தை ஜெயித்தவர்கள்…!
மானத்தை பெரிதாய் மதித்தவர்கள்
மதியால் மரணத்தை ஜெயித்தவர்கள்
மானுடம் போற்றி வளர்ந்தவர்கள்
மக்களுக்காக உற்றாரை துறந்தவர்கள்
மணிமகுடம் சூடா மன்னவர்கள்
மரணத்தை மணித்துளியாய் நேசித்தவர்கள்
மணகோலம் மறந்தவர்கள்
மறுவார்த்தை பேசாத மேதகுவின் மாணவர்கள்
மண்ணிற்காக தன்னை இழந்தவர்கள்
மாவீரர்களாக துயில்கிறார்கள்
மண்ணின் விடுதலைக்காக மனமார துடித்தவர்கள்
மாசற்ற மன்னவர்கள்
விடுதலை வேள்வியில் தன்னை
விறகாய் எரித்தார்கள்
விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பி
கனவுகளை கடத்திவிட்டு சென்றே
கடவுள் ஆனவர்கள்
மாவீரர்கள்
மாவீரர்கள்
மாவீரர்கள்
மண்டியிட்டு வணங்குகிறேன் மாவீரபெருந்தகைகளை
இராகவன் செயராமன்
தஞ்சாவூர்