எம்மவர்
உணர்வுகள் தந்த போர்வீரர்-இவர்
உயிர் ஈந்த தமிழ் மாவீரர்
உடல் வெந்து கருகிய போதினும்
உலகையே திரும்ப வைத்த தமிழ்நேசர்.
உதிரத்தில் வீரம் கலந்த போராளி
உண்மை பேணும் நல்ல புலிவீரர்
உவந்து மக்களை காக்கும் காவலரிவர்
உக்கிரம் கொண்டால் அழிவர் எதிராளி.
சிங்களம் எதிர்த்த நேரம் தன்னில்
சிதறிய மக்கள் உடல்கள் மண்ணில்
சிந்திய ரத்தம் வீணாகிறது என
சினம் கொள்ள நெருப்பாகியது கண்கள்.
சிங்கங்கள் வேட்டைக்கு வந்த நேரம்
சிங்கவேட்டை செய்த வீரப் புலிகள்
சிறையை தகர்த்து பலிகள் தவிர்க்க
சின்னத்தில் புலியை பொறித்த மாவீரர்.
சன்னங்கள் உடலை துளைத்து-மூச்சின்
சப்தத்தை அடக்கும் வேளையிலும் எதிரியை
சரணடைய செய்தவர்-அடங்க மறுத்த
சதிராளரை மண்ணில் அடக்கம் செய்தவர்.
சல்லடை போட்டு எதிரிகள் தேட
சலனமற்ற விழிகள் கொண்டு-மனதில்
சஞ்சலமின்றி எதிரியை வீழ்த்தி-தேச
சமாதானத்தின் விடியலுக்காய் காத்திருந்தவர்.
வேங்கைக் காடுகள் இதுவென ஆக
வேதம் புகழும் கடவுளர் ஆகி
வேகும் தனலில் இரண்டறக் கலந்து
வேந்தன் புகழை வென்றவர் இவர்கள்.
வேழப்படையின் பலம் கொண்டு
வேகப் புயலின் நடை கொண்டு
வேடர்களை வேட்டையாடி வேள்வி செய்த
வேங்கைகள் மீண்டும் மீண்டும் எழுவர்.
மோகனன்