ஐம்பூதங்களின் சக்தியானவன் எம் தலைவன்…!
வறண்ட நிலம் மீது மழைதூவிய
வான்முகிலுக்குப் பல்லாண்டு
நாதியற்ற இனத்தை காத்து நின்ற
காப்பரணுக்கு அகவை அறுபத்தாறு
தமிழ் இனம் மீது இருள் சூழ்ந்த வேளை
ஒளிதூவிய வெளிச்சத்துக்கு
அகவை அறுபத்துஆறு
பகை ஏவிய குண்டுகள்
எம் உயிர்துளைத்த வேளை
நெஞ்சத்துக் கவசமாய் நின்று காத்தவனே
நீ வாழ்க! பல்லாண்டு வாழ்க!
துயர் வடிந்த இனமாய்
நீர் வற்ற நதிப்படுக்கையாய்
விளைச்சல் இல்லா நிலமாய்
நெடுங்காலமாய் உறக்கத்தில் கிடந்தோம்
தட்டியெழுப்ப எவருமின்றி
தவித்து தனித்துப்போய் நின்றோம்
ஐயனே!
இளங்காற்றின் பூந்தென்றலாய்
தழுவினாய் எம்மை
உயிர்த்தெழுந்த எம் கரங்களில்
வாள் தந்து
பெரும் புயலாக வீச வைத்தாய்
காலாற உன் நிழலில் நின்று
கவலைகள் மறந்திருந்தோம்
இன்று மறுபடியும்
எம்மை தவிக்க விட்டு
எங்கு சென்றாய்
உன்னைக் கொண்டாட
தடைபோடும்
அவர்களுக்கு என்ன தெரியும்
எங்கள் தேவன் நீ என்று
ஐம்பூதங்களின் சக்தியானவன்
நீ என்று
நீண்ட நெடுங்காலமாய்
கிடப்பில் கிடந்த வரலாறு
உன் வருகைக்குப் பின்னரே
தலைநிமிர்ந்தது
எவனும் எம் இனத்தை மிதித்து
எது வேண்டுமானாலும் செய்யலாம்
என்ற நிலையை மாற்றிய பெருமை
நின்னதே தலைவா!
நீ பெற்ற வெற்றிகள் அனைத்தையும்
இனத்தின் கையில் தந்துவிட்டு
வெறுங்கையான வெளிச்சம் நீ
எங்கள் விடுதலைப் போரின்
தெளிந்த தலைப்பயணியே
இன்று உனக்கல்ல அகவை
அறுபத்துஆறு
தமிழர் எமக்கே !
தமிழர் விடுலைப்போருக்கு
பல்லாண்டு !
வாழ்க! வாழ்க!
தலைவா நீ வாழ்க!
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.
நாம் தமிழர் கட்சி.