பாதை மாறாதவர்கள்
எங்கள் மாவீரர்கள்…!
விடுதலைதேடி
விடியலைநாடி
விரைந்தவர் மாவீரரே
வீரமரணமென்றாகிலும் விலகிடாப்பாதையில்
நடந்தவர் மாவீரரே
அழிவினைதந்து
அடக்க நினைத்தவரை-தேடி
அழித்தவர் மாவீரரே-இந்த
அகிலமே கண்டு வியந்திடும்
வண்ணம் ஒழுக்கம்
நிறைந்தவர் மாவீரரே
முடக்கிட நினைத்த
பகைவனின் கதை
முடித்தவர் மாவீரரே
மோதிட நினைத்தவன்
முதுகெழும்பபை
உடைத்தவர் மாவீரரே
வலிகளைமாற்றி-புது
வழிகாட்டியாகி
உயர்ந்தவர் மாவீரரே
விழிகளை மூடி
விதைகளாய் மாறி
உறங்குபவர் மாவீரரே
உயர்ந்த கனவிலே
உங்களின் தூக்கம்
உங்களின் நினைவிலே
எங்களின் ஏக்கம்…
த.யாளன்