ஒரு மாவீரரின் வீர யாத்திரை…………
நெய்தல் காற்றின்
வாசமாய்
நெஞ்சங்கள் எல்லாம்
நிறைந்து வாழும்
கார்த்திகையின் வேர்
களங்கள் பல வென்று
ஈழ மனங்களில்
வீற்றிருக்கும்
வரிப்புலியின் திமிரே
கார்த்திபை்பூவிதழ்
அழகே
அன்னைமண்
அந்நியர் மிதிபட்டு
அழிதல் கண்டு
ஆறாத சினம் கெ ாண்டு
அண்ணன் படையில்
வரிப்புலியாக
உருவெடுத்தாய்
பெருந் தீயாகி
பகை தடைகளை
நீறாக்கி
வெற்றிகள் நாம் சூட
வீர விதையாகி
நீ விழுந்தாய்
எங்கள் விடுதலைக்கு
உரமானாய்
கிழிந்த சப்பாத்துடனும்
நீர்குடுவையுடனும்
துப்பாக்கியை
இறுகப் பற்றியபடி
காவலரணில்
கண்விழித்துக்
காத்திருந்தாய்
இனி வரும் தலைமுறை
இன்புற்றிருக்க
வேண்டுமென்றே
ஊனை உருக்கி
உடலை வருத்தி
தமிழீழ நாடு மலர
தீபம் ஒன்று
நீ ஏற்றினாய்
தமிழர் வாழ்வில்
வீரதீபத்தின்
ஔியானாய்
குண்டு மழையிலும்
குருதி ஆறிலும்
நின்று களமாடினாய்
குலமென்று
தலைநிமிர
பெரும் வெடியாகி
உதிர்ந்தாய்
நீ சமராடிய
போர் களம் விட்டு
இன்று வீடு வந்தாய்
மாவீரராய்
சகபோராளிகளுடன்
துயில்வனத்தில்
துயில்கொள்ள.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.