எம் போர்வீரர் கோயில்கள்..
விடுதலை நெருப்பேந்தி
வீரர்கள் களமாடினார்கள்
உலகப்போர் கண்ட வல்லரசுகளை
உதட்டில் விரல் வைத்து
வியப்புறச் செய்த காலம்…
கழுத்தில் நஞ்சு சுமந்து
களத்தில் நின்றவர்கள்
தமிழர் வரலாற்றில் – பெண்கள்
தடம்பதித்த முதல் களம்…
புத்தனை வழிபடும்
சிங்கள இனவெறியனால்
எத்தனை தமிழ் வீரர்களை இழந்தோம்
அத்தனை வீரர்களும்
எம் மாவீரர்கள்…
சீருடை அணிந்த சிறுத்தைகள்
குண்டுகளை வா என்று
கூவி அழைத்த மறவர்கள்
நெருப்பில் இறஙகி
நீச்சல் அடித்தவர்கள்
மண் வாழப் போராடி
கண் மூடிப் போனவர்கள்…
வீரம் நிலைநாட்டி
மண்ணில் வீழ்ந்தவர்கள்
இளவேனிற் காலத்தில்
எரிந்த பூந்தோட்டஙகள்
பூவாய் இருந்தவர்கள்
பூவாய் உதிர்ந்தவர்கள்…
தமிழீழம் விழிதிறக்க
மாவீரர்கள் விழி மூடினார்கள்
மாவீரர் கல்லறைகள்
தமிழீழ மக்கள் பூவைத்துக் கும்பிடும்
எம் போர்வீரர் கோயில்கள்…
– நி.கண்ணன் கமுதி