கானகம் சுமந்த எங்கள் கந்தக வேர்கள்
எம் இனம் வாழ எங்களின் தேவை
எதிரியில்லாதொரு ஈழம் -அதை
எங்களின் கையில் தருவதற்கென்றே
பிறந்து வந்தது வேழம்
நஞ்சுக் கொலைகள் செய்பவர் முன்னே
அஞ்சிக் குனிவது வீணே-அவர்
நெஞ்சை நொறுக்கி நிலத்தை விடுத்து
நெருப்பாய் எரிவது தானே
தேசம் என்று திரிபவரொன்றும்
ஆசைகள் துறந்தவர் இல்லை -அது
பாசம் தன்னை அடைக்கும் வழியை
பக்குவம் கொண்டவர் எல்லை
தலைமை சரியாய் அமைந்து விட்டாலே
தாக்கிய பகைக் குலம் ஓடும் -அது
வலையில் விழுந்த மீனதைப் போலே
துடிதுடித்துடல் வாடும்
கந்தகம் தன்னை உடல் தனில் ஏற்றிய
காவியங்களை தேடும் -சிலர்
வெந்துளம் கொண்டு வேங்கை வழியினை
வீண் பழி பாடிடக் கூடும்
தேசம் தாங்கிய தூண்களை எண்ணித்
தூங்குவதென்பதே இல்லை- வன
வாசம் என்பதே கந்தகம் சூழ்ந்த
காவியப் புலிகளின் எல்லை
சாதலைக் கூட சந்ததிக்காக சமர்களில்
எல்லாம் சேர்த்தோம் -உடன்
காதலில் எங்கள் தேசமே எண்ணிப்
பலமுடன் கரமதை கோர்த்தோம்
தமிழ் சரண்