மாவீரர் குடும்பங்கள் இவர்களா?

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

மாவீரர் குடும்பங்கள் இவர்களா?

தேசத்திற்கு
நீர் வார்த்த குடும்பங்கள்
நீரின்றித் தவிக்கிறது.
வீட்டுப் பிள்ளையை
நாட்டுக்காய் கொடுத்தவர்கள்
வீடின்றி வீதியிலே…
வருடாவருடம்
கெளரவிக்கப்பட்டவர்கள்
தேர்தல் வரும்வருட‌
வாசகங்களாய்
வலம் வருகிறார்கள்.
இவர்களின்
பிள்ளைகள் பெயரால்
ஏராளமானோர் எஜமானர் ஆகினர்.
இவர்களோ???
வெளிநாட்டுப் பிரஜாவுரிமையின்
எல்லா அட்டைகளின் பின்னும்
மாவீரர் குருதியும்
மறைந்திருக்கிறது.
இவர்கள் பிள்ளைகள்
இன்னுயிர் இழந்தபோதுதானே
வெற்றிக்கொண்டாட்டங்கள்
வீதிகளில் முழங்கின.
இன்று இவர்கள்
வீதிகளில் அலைகின்றனர்.
மண்ணின் காட்சிகளை
தேடி இரசிக்கும்
சுற்றுலாத் தமிழர்கள்
மாவீரர் மனைதேடிச் செல்லும்
மாகாரியம் குறைவானதே.
ஒரு ஒப்பந்தத்திற்கும்
சிறு உதவிக்குமாய்
ஓடியாடித் திரிகின்றனர்
உயிர் கொடுத்திட்ட‌
உத்தமர் குடும்பங்கள்.
மாகாண சபையின்
எந்த இடத்திலே
எழுதப்பட்டிருக்கிறது
‘மாவீரர் குடும்பத்திற்கு முதலிடம்’ என்று…
பெயர் தெரியாமல்
முகம் தெரியாமல்
தன்பிள்ளைதன்னை
கொடுத்தாளே தமிழ்த்தாய்.
அவளுக்கிந்த‌
அன்னை மண்
அளித்திட்ட அங்கீகாரம் என்ன?
தமிழரை
உலக மேடையில்
உட்காரவைத்த குடும்பங்களை
உள்ளூர் மேடைகளில்தானும்
உட்கார வைக்கிறோமா?
விழாவொன்றில்
விளக்கேற்ற அழைக்கையில்
வி.ஐ.பி  தேடுகிறோம்.
மாவீரர் குடும்பத்து
மாதாவை தேடுகிறோமா?
தமிழ்ப் பகுதிகளில்
வி.ஐ.பி எனப்படுவோர்
மாவீரர் குடும்பம்
மட்டுமே ஆகட்டும்.
விதையாய் பிள்ளையை
மண்ணுக்கு கொடுத்தவர்க்கு
விவசாய‌
விதைகள் வழங்குதல் மட்டும்
வீரம் ஆகிடுமா?
போற்றிப் பேசியது போதும்
ஏற்றி வைத்திடுவோம்.
காசு கொடுக்க வேண்டாம்
கனம் கொடுப்போம்.
ஆண்டுகள்
ஐந்து ஆகவில்லை.
அதற்குள்ளே
அந்தரிக்க விட்டோம்
மாவீரர்கள் குடும்பத்தை..
ஐம்பது ஆண்டுகள்
அகன்று போய்விட்டால்…….???????
யோ.புரட்சி

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.