கடமை தன்னை முடிக்க காவியமானவர்கள்…!
தேசமெங்கும் ஒளி கொல்லுதே
மாவீரர்கள் இலட்ச்சியங்கள்
கண்ணீரில் நனையுதே தேசம்
கார்திகையின் ஒளி கொண்டு
வீரத்தின் வரலாறு தந்த வல்லவர்கள்
வரலாற்று தடம் உயிர் பெறுகின்றது
மண்ணுக்கும் மக்களுக்கும்
உயிர் தந்தோர் காவியங்கள்
குமுறி எழுகின்றதே
உறவுகளின் அழுகுரலில்
உணர்வுகள் சிலிர்க்கின்றதே
உரிமைக்காய் உயிர் தந்தோர்
விழிகளும் திறக்கின்றதே
தேசத்தில் இன்று கார்த்திகை நாள்
தேகத்தில் ஏனோ உணர்வும் சிலிர்கிறதே
கடமை தன்னை முடிக்க
காவியமானவர்கள்
கல்லறைகள் எங்கே
காணாமல் போனாலும்
தீபங்கள் ஏற்றியே
உதிரங்கள் அடங்க
உறைந்தே நிற்கின்றோம்
தேசத்தின் தவப்புதல்வர் நினைவில்….
=சிவா TE=
(தமிழீழம்)