போர் நெறி மீறியும் பொங்குவோம் போர் களத்தில்
இளமையை எடுத்து எறிந்து இலக்கினை
தொட்ட எங்கள் விடுதலை வீரம் ஒன்றும்
விளையாட்டு ஆகிடாது.
சந்ததி வாழ எண்ணி சமர் களம் கண்ட
உங்கள் சத்திய போரில் ஒன்றும்
சாதனை இல்லை என்றார்
எம் குலம் மண்ணில் வாழ எதிரியை
திணறடித்த உம் பணி என்னவென்று ஈனர்க்கு புரிவதுண்டோ
எம்மவர் கூட இன்று எதிரியின் பக்கம் நின்று
பிள்ளைகள் பிடித்து தின்ற நரிகளே நீங்கள் என்றார்
இனமதை அழித்த ஈனர்கள் என்றும் சொன்னார்
வீரமும் வேகம் கொண்ட உங்கள் தாகத்தின் முன்பு அந்த ஈன சொல் எந்த மூலை
மண்ணையே காதல் செய்த உங்களின் ஈகத்துக்கு போடுவோம் நாங்கள் மாலை
சிங்களம் போர் நெறியை மீறவே இல்லை என்றால் வெற்றியே எங்கள் பக்கம்
வெங்களம் யாவும் நச்சு குண்டினை போட்டு
கொன்ற வீரமே உங்கள் பக்கம்
ஆடுவதும் நன்மைக்கே ஆடுங்கள் ஆடும் மட்டும்
ஓடுவது ஒரு நாள் ஓடுங்கள் சாகும் மட்டும்
காட்டிய கயவரை கூட்டிற்று ஓடுங்கள்
இனி கொல்வதே எங்கள் வேலை
போர் நெறி மீறியும் நாம் இனி பொங்குவோம் போர்களத்தில்
நேருக்கு நேர் எதிர் ஆடி வா பகையே
மோதுவோம் சாக்களத்தில்
உயிரும் எமது உடைமையும் எமது
உணர்வும் எமது உதிரமும் எமது
சிந்திய குருதி காயும் முன்னமே
முந்திய தேசம் மீட்பது உறுதி……
…
……கவிப்புயல் சரண்..