இலட்சம் இலட்சம் உயிர் கொடுத்து
வளர்த்தெடுத்திய பயிரல்லவோ தமிழீழம்!
சமரசமில்லை தமிழர் தம் வாழ்வில்
ஆழி சூழ்ந்த தீவில்
தமிழ்த்தேசம் தலைநிமிரும் ஓர் நாளில்!
தமிழர் கோ அவர்தம் வழியில்
விதையான மாவீரர்களே
மறவோம் நிம் இலட்சியம்!
இலட்சம் இலட்சம் உயிர் கொடுத்து
வளர்த்தெடுத்திய பயிரல்லவோ தமிழீழம்!
அதை மறந்து உணர்வற்று இருக்கலாமோ
தமிழ் மாந்தரே நாள்தோறும்?
உணர்வை எரிதழலாய் எடுத்து
விடுதலைக் வேட்கையைக் கொளுத்து.
தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்!
– கோ. கார்த்திக் பாரதி
தமிழ் வாழ்க!
நாமார்க்கும் குடியல்லோம்;