காதலிக்க ஆசை எனில் கரிகாலன் கண் அசைவை காதல் செய்வீர்

In தலைவர் கவிதைகள், தாயக கவிதைகள்

காதலிக்க ஆசை எனில் கரிகாலன் கண் அசைவை காதல் செய்வீர்

அது ஒரு காலம் .
வரியுடை போட்டு எமை அழகு பார்த்த காலம்.
வல்லமைகள் எங்கள் அருகில் வலம் வந்த காலம் .

அப்போது ஒரு நிலம் எங்களிடம் இருந்தது
குறுகிய நிலம் என்றாலும் கூன் நிமிர்த்திய நிலம் அது.

அங்கே நாங்கள் காதலிக்க ஒரு பெரும் சனக்கூட்டம் இருந்தது
எங்களை காதலிக்கவும் அந்த சனக்கூட்டம் மறக்கவில்லை .

நாங்கள் நிலத்தை காதலித்த பொழுது எல்லாம் நிலமும் எங்களை காதல் செய்தது .

அம்மா அப்பா அக்கா தம்பி தங்கை என்ற உறவுகளை கீழ் தள்ளி ஒரு உறவு மேல் நோக்கி இருந்தது
அது தான் அண்ணன்
அது தான் தலைவன்.

நெருப்புக்குள் நீந்தவும்
நீருக்குள் உயிர் வாழவும் எமக்கு பயிற்சிகள் கொடுக்கப் பட்டது .

எம் நிலம்
எம் பலம்.
எம் வனம்
எம் வானம்
எம் கடல்
எம் சனம்
இவை காக்க படவேண்டியவை மட்டும் அல்ல தேக்கப் பட வேண்டியவை .

ஆர்ப்பரிக்கும் கடலுக்கு மத்தியிலும் அமைதிப்பூங்காவாய் எம் வாழ்வு இருந்தது

சிங்கள ஓநாய்கள் சிதைக்காது இருக்க முள்வேலிகளோடு நாங்களும் காவல் இருந்தோம்

காயமடைதல்
குணமடைதல்
களம் திரும்பல்
இதுவே எங்கள் வாழ்வியல் எனக் கொண்டு இருந்த பேரின்ப பெரு வாழ்வு அது

சேனைப் புலவை சிதைக்க ஆனைப் பெரும் கூட்டம் அன்று உள் நுழைந்தது
காலித்தெருக்கள் எல்லாம் கலைத்து களைத்து விட்டோம்

நாம் காதலித்த மக்கள் சாதல் விரும்பாமல்
நாம் காதலித்த காடு அழிய விரும்பாமல்
காதலித்த தலைமை கண் காட்ட கந்தகத்தை இறக்கி வைத்தோம் .

சாதல் ஒரு பெரு விருப்பு எமக்கு அதுவும் சந்ததிக்காய் என்றால் சந்தோச பெரு மகிழ்வு .

கன நேரம் கந்தகம் காலில் கிடக்காது
கசங்கும் தமிழ் வாழ்வு காண மனம் நிலைக்காது
தேர் ஏறும் ஒரு நாள் பார் ஆள வரும் பெரு வீரம்
விதைத்த கரி மருந்து
தோள் ஏறும் நாள் தொலைவில் இல்லை

காதல் திரு நாளில் கந்தகத்தை காதல் செய்வோம்
கண் மணியாய் காத்து நின்ற காவலரை காதல் செய்வோம்
கரிகாலன் கண் அசைவை காதல் செய்வோம்

தேசத்தை மக்கள் பாசத்தை காதல் செய்வோம்
கரிமருந்தை காதல் செய்வோம்
கன்னி மனக் காதல் பெரிதல்ல எமக்கு
கண்ணி வெடிக் காதல் போதும் தீர்ப்போம் பகைக் கணக்கு .

……கவிப்புயல் சரண்..

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.