புலியாய் வெல்வோம்…
பகை வருமென
விழித்திருந்தோம்
காத்தும் இருந்தோம்
எதிர் பார்த்திருந்தோம்
தனித்தும் இருந்தே
அவனை தாக்கினோம்
தவிடு பொடியாக்கியே
தடையும் உடைத்தோம்
புயலாய் இருந்தோம்
புலியாய் வென்றிட
தீயாய் எதிர்கொண்டே
தீயவனை அழித்தோம்
இருவிழிகளை முழித்தே
இருளிலும் இருந்தோம்
இடியெனவே வென்றே
இருளை அகற்றினோம்
இனமானம் காத்து
இன்னல் அகற்றினோம்
பசித்தும் இருந்தே
பகையை எதிர்த்தோம்
எரிதணலாய் இருந்து
எதிர்த்தே நின்றோம்
சுமையும் தூக்கியே
சுடுகலனுடன் நின்றோம்
பட்டப் பகலிலும்
வெட்ட வெளியிலும்
கொட்டும் மழையிலும்
கடும் பனி குளிரிலும்
துணிந்தே நின்றோம்
தாயகக்கனவுடன்
தலைவரின் வழியிலே
தலைவரின் அணியிலே
தயங்காமல் நின்றோம்
சாவையும் எதிர்த்தோம்
உறுதியாய் நின்றோம்
யுத்தம் புரிந்தோம்
பகையை அழித்து ஓர்நாள்
சரித்திரம் படைப்போம்
வரிகள்
“ஈழம் வாகீசன்”