வீர நெஞ்சங்கள் தோட்டாவை ஏந்தியது
கண் முன்னே என் தெய்வம் கதறியது
பாவி நான் பதுங்கி நின்றேனே….!!!
உறவு இழந்து பிறவி மறந்து
கொதிக்கும் குருதியை குழந்தை
பருகி பிழைக்கும் மானிடரை புதைத்து
விட்டு பிள்ளை பேசும் முன்னே தூர வீசி
ஒதுங்க இடமின்றி பதுங்க புதர் இன்றி குருதி
வெள்ளத்தில் நீந்தினோமே அன்று
முள்ளி வாய்க்காலில்….!!!
ஆழ்ந்த உள்ளங்களும் அநாதை ஆனது
பிஞ்சி முல்லைகளும் சிதறி போனது
வீர நெஞ்சங்கள் தோட்டாவை ஏந்தியது
கண் முன்னே என் தெய்வம் கதறியது
பாவி நான் பதுங்கி நின்றேனே….!!!
குருதி தொடைக்க காகிதம் இன்றி குழந்தை தழுவ
கைகளும் இன்றி அன்னை முகம் காண குழந்தையும்
இன்றி சுடும் குருதி வனமாய் முள்ளி வாய்க்கால்
கொதித்தது அன்று….!!!
சு.லக்ஸன்