தாய் நாடு
********
தாய்க்கு நிகராக
எம்மை காத்தே
உலகம் அறிய
நித்தம் வைத்தவளே
அன்னை மொழியினையே
தினமும் காத்திடவே
வீரத்தின் பாலை
தினமும் ஊட்டியவளே
நாம் செய்யும்
குற்றம் பொறுத்தே
பொறுமையின் இலக்கணமாய்
தினமும் வாழ்பவளே
உன்னிடமே நாமும்
தாய்மையை கண்டு
நித்தம் மகிழ்கின்றோம்
உயிர் பிரிந்தாலும்
நீயே தாங்குகின்றாய்
உன் பிள்ளையாய்
ஈழ தேசமே
உன்னை நானும்
தாய் நாடு
என்பதிலே மகிழ்கின்றேன்
தாய்க்கு நிகரான
தாய் நாடே
உன்னை நானும்
காத்திடுவேன் உயிராக
பாரதி மைந்தன்