எம் மானம் காத்த மறவர்கள் …!
மாவீரம் எம் ஈழப்புலி மாவீரர்கள்
எம் மானம் காத்த மறவர்கள் …!!
தீயில் எரிந்த தேசம் கண்டு
எரிமலையாய் எழுந்தவர்கள் ……!!
தேசிய தலைவன் வகுத்த பாதையிலே
களமாடி நிமிர்ந்தவர்கள் …………!!
சத்திய வேள்வியிலே நித்தம் களமாடி
சரித்திரம் படைத்த காவிய நாயகர்கள்…!
கல்லறை காவியம் இன்று
கண்முன்னே தெரியுமெடா………!!
நெஞ்சிலே கை வைத்து
ஈழ தேசத்தை நினைத்து பார்……!!
உன் காதருகே நின்று கதை பேசுவர்
எம் காந்தல் மலர்கள் ………!!
இன்று உங்கள் பாதங்கள் – ்
மரணமில்லா எம் மறவர்களின்
துயிலிடம் செல்லட்டும் ………!!
ஏனெனில் உங்களோடு உறுதிமொழி
பேச எம் கல்லறை மேனியர்
கண்விழித்து காத்திருப்பர்.……!
உங்கள் வருகையே அவர்களின்
இலட்சியத்தை மேலும் உயிராக்கும்.
ஏமாத்தி விடாதீர்கள் எங்கள்
மாவீரச் செல்வங்களின் நம்பிக்கையை
ஏனெனில் அவர்கள் எங்களுக்காக
உயிர்தியாகம் செய்தவர்கள் ,………!!
ஈழ மறவர்கள் துயிலிடம் நோக்கிய
பயணத்தோடு உங்களோடு
s rathan karthika