துயரம் நமக்கு புதிதல்ல துவண்டு விடாதே என் தோழா….!!
கண்ட வேதனை போதுமெடா…..!!
புது விடியல் நமக்கு வேண்டுமெடா….!!
வேகம் கொண்டு எழுந்திடடா – தமிழா
புத்தாண்டில் புதுமை கண்டிடெடா……!!
துயரம் நமக்கு புதிதல்ல……..!!
துவண்டு விடாதே என் தோழா….!!
பாயும் புலிக்கு சாவில்லை……..!!
அவர் பாய்ந்த பின்பும் உயிர் வாழுமெடா..!!
வாழும் போதே உறுதி கொள்ளு
ஈழவாசல் கதவு உனை அழைக்குமெடா…!!
உன் உணர்வும் செயல்களும்
தமிழீழத்திற்கேயானால்…….!!
நீயும் ஈழத்தின் பாயும்புலி தானெடா….!!
எம் ஈழத் தலைமகன் வருவானெடா
நாளை ஈழம் மலரும் இது உறுதியெடா..!!
துவண்டு விடாதே புத்தாண்டில்
துயரை துடைத்து புது நிமிர்வோடு
விடியல் காணும் நாளுக்காய்
விரைந்து வா தோழா……!!
s rathan karthika