எம் நாட்டில் நாம் அடிமை….!
வந்து மண் ஏறிய வந்தேறி உனக்கே
வருவது கோபம் என்றால்
சொந்த மண் தன்னில் சுதந்திரம்
இழந்தோம் சொல்லவா வேண்டும் எமை
அஞ்சிடும் எண்ணம் அடிமைக்கே உண்டு
ஆண்மைக்கு இல்லை உணர்வாய்
துஞ்சிடும் நரியே உன் தோள் வலி வேறு
எம் பெண்மையின் வீரம் காண்பாய்
வல்ல எம் ஈழம் வாசலைத் தட்டும்
வருவது போரலையே
சொல்லினில் வீரம் காட்டுதல் நிறுத்து
எம் தாகமும் தீரலயே
கோடி சூழ் துன்பம் கொடியென வரினும்
விதிப்படி போராடுவான்
ஆடிய போரில் வாடிய போதும் மழையென
மண் விழுவான்
வீரத்தை குறைத்து சோரத்தில் போக
வீரனும் தலை குனியான்
தாகத்தை இழந்து தாயகம் மறந்தால்
தமிழுக்காய் உயிர் தருவான்
காட்டிடை வாழும் சிறு நரி கூட
சிங்கத்தின் அடிமை இல்லை
நாட்டிடை மட்டும் பேரினவாதம்
ஈழத்து வாழ்வில் தொல்லை
வையகம் வாழ வளர் புகழ் ஓங்க
தாயகம் வாங்குவமே
கையைப் படுத்தி காரிருள் நீக்கி
தமிழராய் வாழுவமே…..
…..கவிப்புயல் சரண்….