போராடித் தோற்ற நாடு….!
எழுந்த உன் சேனைகள் திசை பட
வீழவே அறம் பாடி அழித்த நாடு
நிலைதனை குலைத்து பகை வழி
கலைத்த மறம் நிறை ஈழ நாடு
தலையினை குனியாத் தமிழர்
தம் வீரம் மலையென நிமிர்ந்த பூமி
விடிவினை எண்ணித் தினம்நூறு
உயிரை குழியினில் விதைத்த பூமி
சூழ்ந்திடும் துன்பம் பனியென விலக
படை தனைக் கொண்ட பூமி
வாழ்ந்திடும் வரையும் நிலமதை விலகா
நினைவுடன் வாழ்ந்த பூமி
பகை நொடி கையில் அகப்படும் எனினும்
போராடி மடிந்த தேசம்
அடிமைகள் ஆகினர் என்றதன் பின்னும்
அடங்கிட மறுத்த தேசம்
ஒரு முறை உந்தன் ஆயுதம் களைந்த பின்
உரசிடு வந்து எம்மில்
அடிமைகள் என்னும் சொல்லினை அழித்து
மறுபடி ஏறும் மண்ணில்
…..கவிப்புயல் சரண்….