கார்த்திகை தெய்வங்களே……!
நான் பெரிது நீ பெரிது
என்று வாழாதே……!
நம் நாடே பெரிது
என்று வாழு………!
நம் நாடு பெரிதானால்
நாம் எல்லாம் அதில் சிறியவர்களே…! என்ற எமது தேசியத் தலைவனின்
மனதில் உதித்த எண்ணத்தை
நெஞ்சத்தில் நிலைநிறுத்தி
செயல் வடிவம் கொடுத்தவர்கள் -எம்
மாவீரர் செல்வங்கள்.
இன்று எம் காவிய நாயகர்களின் நினைவுகளை
சுமந்து வருகின்ற……
கார்த்திகை மாதம்
முதலாம் நாள்.
கார்த்திகை மாதமே
எம் வீரப் புதல்வர்களால்
இன்று உயிர் பெற்று
நிற்கின்றது………!
எம் மாவீரர் செல்வங்களே…!
உங்கள் வீரங்களும்……
தியாகங்களும்……
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாதவை……!
உம் நினைவுகளை
போற்றுவதற்கு……
உள்ளம் துடிக்கிறது…
எழுது வடிவம் கொடுக்கையிலே…
கண்களிலே நீர் கசிகின்றது
நீங்கள் மண் மீது கொண்ட
பாசம் எமை மௌனிக்க
வைக்கின்றன…
வார்த்தைகள் இல்லை
உமை போற்றுவதற்கு.
எம் தேசிய தலைவனின்
அரவனணப்பில் வளர்ந்த
அக்கினிக் குழந்தைகள்…
இழப்புகள் எமக்கு
புதியவை அல்ல……
சோதனைகளை சந்திப்பது
இதுதான் முதல்தடவையும்
அல்ல எனவே பாதிவழியில்
எமது பயணங்கள் நிற்காது
என்று மனதிலே திடம்
கொண்டு பல வெற்றிகளை
எமக்கு பெற்று தந்தவர்கள்
எம் ஈழ மைந்தர்கள்……!
இலங்கை அரசின் அராஐகத்தை கண்டு
விடியலுக்காக உமை
அர்ப்பணித்துக் கொண்டவர்கள்……
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் என்றும்
முடிவதில்லை………
வெற்றிகளும் தோற்பதில்லை……
உங்கள் இலக்குகள் ஒருநாள்
விடியல் காணும்……!
எம் ஈழத்து காவிய நாயகர்களே நீங்கள்
நித்தம் எம் நெஞ்சத்தில் வாழும் காவல் தெய்வங்கள்
எம் பாச உறவுகளே……!
எம் மாவீரர் செல்வங்களை
மனதிலே நினைத்து
உறுதி கொள்வோம் நிட்சயம்
மலரும் தமிழீழம் .
றதன் கார்த்திகா