கார்த்திகை தெய்வங்களே……!

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

கார்த்திகை தெய்வங்களே……!

நான் பெரிது நீ பெரிது
என்று வாழாதே……!
நம் நாடே பெரிது
என்று வாழு………!

நம் நாடு பெரிதானால்
நாம் எல்லாம் அதில் சிறியவர்களே…! என்ற எமது தேசியத் தலைவனின்
மனதில் உதித்த எண்ணத்தை
நெஞ்சத்தில் நிலைநிறுத்தி
செயல் வடிவம் கொடுத்தவர்கள் -எம்
மாவீரர் செல்வங்கள்.

இன்று எம் காவிய நாயகர்களின் நினைவுகளை
சுமந்து வருகின்ற……
கார்த்திகை மாதம்
முதலாம் நாள்.
கார்த்திகை மாதமே
எம் வீரப் புதல்வர்களால்
இன்று உயிர் பெற்று
நிற்கின்றது………!

எம் மாவீரர் செல்வங்களே…!
உங்கள் வீரங்களும்……
தியாகங்களும்……
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாதவை……!

உம் நினைவுகளை
போற்றுவதற்கு……
உள்ளம் துடிக்கிறது…
எழுது வடிவம் கொடுக்கையிலே…
கண்களிலே நீர் கசிகின்றது
நீங்கள் மண் மீது கொண்ட
பாசம் எமை மௌனிக்க
வைக்கின்றன…
வார்த்தைகள் இல்லை
உமை போற்றுவதற்கு.

எம் தேசிய தலைவனின்
அரவனணப்பில் வளர்ந்த
அக்கினிக் குழந்தைகள்…
இழப்புகள் எமக்கு
புதியவை அல்ல……

சோதனைகளை சந்திப்பது
இதுதான் முதல்தடவையும்
அல்ல எனவே பாதிவழியில்
எமது பயணங்கள் நிற்காது
என்று மனதிலே திடம்
கொண்டு பல வெற்றிகளை
எமக்கு பெற்று தந்தவர்கள்
எம் ஈழ மைந்தர்கள்……!

இலங்கை அரசின் அராஐகத்தை கண்டு
விடியலுக்காக உமை
அர்ப்பணித்துக் கொண்டவர்கள்……
நினைத்தது நடந்திடாமல்
இலக்குகள் என்றும்
முடிவதில்லை………
வெற்றிகளும் தோற்பதில்லை……
உங்கள் இலக்குகள் ஒருநாள்
விடியல் காணும்……!
எம் ஈழத்து காவிய நாயகர்களே நீங்கள்
நித்தம் எம் நெஞ்சத்தில் வாழும் காவல் தெய்வங்கள்

எம் பாச உறவுகளே……!
எம் மாவீரர் செல்வங்களை
மனதிலே நினைத்து
உறுதி கொள்வோம் நிட்சயம்
மலரும் தமிழீழம் .

றதன் கார்த்திகா

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.