சோழத்தின் வம்சம் நாங்கள்
இரையினை கொல்லும் வேங்கை
இலக்கினை மறந்ததில்லை
பசியுடன் செய்யும் போரில்
வெற்றிகள் தோற்றதில்லை
விடிவுனை நெருங்கும் போதில்
முடிவுகள் கையில் எட்டும்
பகையினை வெல்லும் போரில்
மிகுவலி சுகமாய்ப் போகும்
வீரத்தின் வேர்கள் என்றும்
வெளியினில் தெரிவதில்லை
வேகத்தின் கணிப்பு ஒன்றும்
ஒளியினில் மறைவதில்லை
சோகத்தின் தாக்கம் ஒன்றும்
கோபத்தின் தொடக்கம் இல்லை
ஆழத்தில் புதைந்த வீரம்
அழிவது அழகும் இல்லை
சோழத்தில் வந்த வம்சம்
அடங்குதல் மரபும் இல்லை
வேழத்தை வென்ற உந்தன்
கோலத்தை நெஞ்சில் ஏற்றி
காலத்தை வெல்லும் அந்த
வீரத்தை அள்ளி ஊற்றி
ஞாலத்தை வெல்லும் அந்த
ஓர்மத் தீ பற்றி எழு.
தாகத்தை பசியாய் மாற்றி
வேகத்தை நெஞ்சில் ஏற்றி
கோபத்தை கண்ணில் கூட்டி
மோகத்தை விட்டு பூட்டி
சோகத்தில் கோபம் கூட்டி
தொட்டிடு வெற்றிக்கனி..
…..கவிப்புயல் சரண்….