வீரத்தின் விளைநிலங்கள்….!
வீரத்தின் விளைநிலங்கள்….!
நள்ளிரவைக் கிழித்து
ஒளிபரப்பும் குட்டி சூரியன்கள்/
இவர்கள் யாரும் அறியாத
மாபெரும் சரித்திரங்கள்/
தம்மையே எமக்காக தந்திட்ட
தியாகத்தின் செம்மல்கள்/
பல தடைகள் தாண்டிவந்த
தமிழீழத்தின் உயிராயுதங்கள்/
அண்ணன் சொல்லையே
தாரக மந்திரமாக கொண்டவர்கள்/
எதையும் முடித்துக்காட்டும்
தனிப்பெரும் காவியங்கள்/
காரிருளிலும் வானில் மின்னும்
வானத்து விண்மீன்கள்/
நடு நிசியிலும் உறங்கிடாத
உறங்காத கண்மணிகள்/
தனியே சென்றாலும்
பெரும் படையானவர்கள்/
பகை களத்தினுள் வாழ்கின்ற
பயமறியாத வீரவான்கள்/
சொற்களால் வரையமுடியாத
வரலாற்றின் பெரும் காப்பியங்கள்/
இடர் அகற்ற பிறந்திட்ட
தேசத் தலைவனின் சுவாசமானவர்கள்/
தம்மையே உவந்தளித்திட்ட
கரிகாலனின் கரும்புலிகள்/
விடுதலைக்கு வித்திட்ட
வெற்றி தரும் படிக்கற்கள்/
தேச விடியலை தாங்கிநிற்கும்
ஈழதேசத்தின் அடிக்கற்கள்/
தமிழ் தேசத்தின் அறுவடைக்கு
வீரத்தின் விளைநிலங்கள்/
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்.