தீயவர் எரிக்கும் தீபம்
திமிருடன் எரிவதில்லை
தெரிந்து கொள் தீயின் வேகம்
தென்றலும் அணைப்பதில்லை
எரிமலை ஒன்றும் பொங்கி
எதிரியை அழிப்பதில்லை
எளியவர் கோபம் கொண்டு
வலியவர் வீழ்ந்ததில்லை
ஆட்சியில் மொழியின் தாக்கம்
அனைவரும் அறிந்ததில்லை
அடிமைகள் ஆன பின்னும்
அடங்கியே போனதில்லை
வீழ்ச்சிகள் கண்ட இனம்
வீழ்ந்துமே கிடப்பதில்லை
தாழ்ச்சியை மனித மனம்
தரமென்றும் நினைப்பதில்லை
மகுடிக்கு மயங்கா பாம்பின்
மரபணு மாற்றம் இல்லை
பழக்கமாய் போய் இருந்தால்
மயங்கிடத் தேவை இல்லை
சுடுவது நெருப்பின் சக்தி
அணைப்பது நீரின் புத்தி
இருகுணம் கொண்டு இருந்தால்
இயற்கையை வென்றிடலாம்..
…கவிப்புயல் சரண்…..