இறுதித் தமிழன் உள்ளவரை உங்கள் தியாகம் காவி நிற்கும்…!
காந்தள் காற்றிலே
உம் கல்லறை தேடி வரும்
கார்த்திகை காலமெல்லாம்
உம் நினைவு கொண்டு தரும்!
கந்தக வாசமும் பெரு வெடியோசையும்
தாய் மடி தந்து உம்மைத் தாலாட்டிச் செல்லும்!
தமிழர் பறையும் எங்கள் தமிழும் மங்களம்
பொங்கவே உங்கள் பெயர் சொல்லும்!
பொங்கியெழும் கடலலையும்,
இடியோடு பெய்த கனமழையும்
மாவீரர் மனம் காட்டும்!
தர்மம் உலகில் தழைத்திருந்தால்
இறுதித் தமிழன் உள்ளவரை
உங்கள் தியாகம் காவி நிற்கும்!
-தமிழீழன்-