பொருமிய மனதுடன் புதையுறு குழிகளில் பூக்களை விதை விதைத்தோம்….!
சூழவும் சிங்களம் சுட்டிட துடிக்கையில்
யார் கையை தொட்டு நிற்போம்
வெங்களம் யாவிலும் வீரத்தை காட்டிய
வேழத்தை காத்திடு என்றோம்
வாழவே முடியாத நிலையினில் கூட
வரலாறு படைக்கும் என்றோம்
வைத்த நம்பிக்கை தளர்வுற எதிரியின் வழியினை எட்டியே நடை பயின்றோம்
மரணமே முடிவினை தரும் என
நொடியினில் மயங்கியே நிலம் விழுந்தோம்
பொருமிய மனதுடன் புதையுறு குழிகளில்
பூக்களை விதை விதைத்தோம்
பிஞ்சினை கொன்றிடும் நஞ்சினை கண் எதிர் கண்டதும் நிலை குலைந்தோம்
பெண்களை குலமென கொண்டவர் என்பதால் கூவியே நாம் அழுதோம்
சிங்களம் செய்திடும் வஞ்சகம் என்பது
வரலாறு சொன்ன கதை
வெங்களம் மீதினில் இந்தியம் என்பது
புலியணி விட்ட பிழை
கந்தகம் கடுவிடம் கயிற்றினில் கட்டிய
காவலை நாம் இழந்தோம்
கடல் யாவிலும் காரிருள் சூழ்ந்திட
ஈழ கனவையும் கரைத்து விட்டோம்
உயிரினை போரில் இழந்த எம் உறவை
மனங்களில் பதித்திடுவோம்
சொந்தமும் பந்தமும் பிரிந்தெமை
காத்த நினைவுடன் வாழ்ந்திடுவோம் ..
வலியுடன் இன்றும் வாழ்பவர் உண்டு
வளங்களை உதவி செய்வோம்
ஆள்பவர் ஒன்றும் செய்தது இல்லை
அவரது விழி துடைப்போம் .
போரினில் எம்மை வென்றிட்ட போதும்
வீரியம் அழியவில்லை
ஆரியம் தன்னை அழித்திட எண்ணில்
அவர்க்கு காரியம் முடித்திடுவோம்……
…..கவிப்புயல் சரண்….