உலகத்தின் முதல் மடி.
உலகத்தில் உள்ள அன்னையர் கெல்லாம் அன்னை இவள்.
மண்ணுள் மறைந்திருந்து ஆட்சி செய்யும் பூமாதேவியும் இவள்.
இம்மண்ணில் யாரறிவார் தமிழர்கள் பிறப்பின் தொன்மை,
விஞ்ஞானம் கொண்டும் அறிந்திடாத மர்ம மண்ணை,
ஆண்ட தமிழர் வீரங்களின் அடையாளங்கள் புதையுண்டே,
தோண்ட தோண்ட தொடர்கிறதே முடிவில்லா நீளமாக,
தமிழனின் தாய்மடி அது ஒன்றே உலகத்தின் முதல் மடி,
ஆயிரம் கதைகள் சொல்லும் முதல் இனத்தின் மண் அடி,
ஆதிமுதல் அந்தம் வரை அகதியாய் வாழவில்லை,
மண்டியிட்டு மானம் இழந்து வீழ்ந்ததில்லை,
இன்று அதனையே இடித்துரைத்து சொல்கிறதே தாய்மடி,
முடியவில்லை இன்னும் அறிவியலின் தேடல் அதுவே கீழடி,
எழுத்தாக்கம்
ஈழம் வாகீசன்