தேசப் புதல்வர்களைத் தேடி…
சந்தனப் பேழையர்
வரவினை வேண்டி
கார்த்திகை பிறந்தது.
இடியும், மழையுமாய்
இயற்கையும் இசைத்தது.
வீசிய காற்றுடன்
மின்னல் ஒளியினில்
காந்தளும் மலர்ந்தது
பகலவன் படையினர்
காலாற நடந்திட
காரிருள் சூழவே
பகலதும் குறைந்தது.
வருடத்தில் ஒரு நாள்
எம் மனதோடு பேச
தம் மெளனம் கலைக்குமே
மாவீரர் விதைகுழிகள்
ஏந்திய விளக்கினில்
ஏற்றிய தீபத்தில்
உங்கள் திருமுகங்காணக்
காலமெல்லாம் காத்திருப்போம்!
-தமிழீழன்-