என் மண்ணுக்கு தனி வாசம் ….!!
ஊருக்கு ஒரு வாசம் – உலகில்
என் மண்ணுக்கு தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே
கார்த்திகை காந்தள் மலரில்
தமிழீழம் புலர்வாகிதே
புயல் எழுமோ
இன்னும் இடி விழுமோ
இதயம் இடம் நீங்கில்
இனியும் ஒரு விதி செய்வோம்
உரம் இட்டு உதிரம் ஊற்றிய
உன் தாயகம் உனக்கே அது
கவி எழுதி சுரம் மீட்டு
புவி மீட்க களம் பொருது
வங்கத்திலும் வெடியானதே
வேங்கை,
வெண்சங்காய் தினம் வாழுதே
தமிழீழ பூ வாசம்
உலகெங்கும் உயிரானதே
தயங்காதே தமிழா தமிழீழம் உனதே
ஊரெல்லாம் ஒரே வாசம்
தமிழீழத் தனி வாசம்
மாவீரர் முகம் தோணுதே
செம்மொழித் தமிழ் குழைத்து
காந்தள், கதிர்ச் சோலை கரம் சேருதே
பாவலர் வல்வை சுயேன்