கரிகாலன் படை சேர்ந்து கந்தகம் சுமந்தவர்கள்…..!
கரிகாலன் படை சேர்ந்து…
கந்தகம் சுமந்தவர்கள்…
எதிரியை சிதறடிக்க ….
எரிமலையாய் எழுந்தவர்கள் …
கடமையில் தவறாது …
கண்ணியம் காத்தவர்கள்…..
காலத்தின் சிகரங்களாய் …
நிலையாக வாழ்கிறார் …
உயிரீகம் தந்தவர்கள் ….
விழிமூடிப் போயினர்….
விதையாக உறங்கியே….
முளையாக எழுகின்றார் …
மீளும் மாவீரர் நினைவுகளோடு ….
எஸ்.றதன் கார்த்திகா.