புறநானூற்றின் போரரசன்…!
செந்தமிழ் ரத்தம்
எழுச்சியின் சிகரம்
கல்லுடன் நடந்தால்
சொல்லுடன் செதுக்கப்பட்டிருக்கும்
நாளைய விதிகளை
படிமம் காட்டும் சுடரொளி
எழுத்தாளன், ஓவியன்
சிற்பி, சுமைதாங்கி,
போராளி, தளபதி
தமிழர்சேனையின் தலைவன்
தாயின் பாதத்தில்
புன்னைகையரசன்
தாயை பகைத்தவனுக்கு
புறநானூற்றின் போரரசன்
மண் காதலின் வகைகளில்
வலையினில் நீர்மம்
வளையலில் திடம்
உண்மைக்கு மட்டும் இடம்
நேரம் உயிரன்றோ
நேர்த்தி கொள்வான்
நேசம் வேசமெனில்
கொல்ல திட்டமிடுவான்
தோட்டாக்கள் ருசி காணும்
எதிரிகளின் உயிர்
ஈழம் புகழ் மாறன்