கார்த்திகை மாதம்……!
கார்த்திகைப் பூக்கள்….
கைகளில் ஏந்தி…
மா… வீரர்களின்
கல்லறை செல்வோம்.
கண்களிலே கண்ணீர்…
கரைகிறது.
தாயின் கருவறையும்….
துடிக்கிறது.
பெண்களிலே வீரம்…
சுரக்கிறது.
தமிழீழத்திலே வீரம்
விளைகிறது.
மறவர்படையாய்….நாம்
மாறப்போகிறோம்.
விடுதலைத் தாகத்திலே…
வெற்றிக் களமாடப்போகிறோம்.
இனி வரும் வம்சம்…
கல்லறை கண்ட
காவியர்கள் தந்த வழிதனை…
கலக்கமில்லாமல் காத்திடவேண்டும்.
பாதுகாத்திட வேண்டும்.
ஈழமகள் உங்கள் அபிசேகா.