உயிரற்ற என் எழுத்துக்கு உயிர் கொடுத்த கார்த்திகை நாயகரே.!
உயிரற்ற என் எழுத்துக்கு
உயிர் கொடுத்த கார்த்திகை நாயகரே.!
நீர் துயில் எழும் நேரம்
நமை நெருங்கி வருகுதையா………!!
உம் விழி திறக்கும் நாளை நினைக்க
மனதில் புதுவேகம் வந்து பிறக்குதையா…………!!
உம் கல்லறை மடிதனில் தவழ
காந்தள் மலர்கூட இங்கு ஏங்குதையா..!
கார்த்திகை பூ எடுத்து வருவோம்..…!!
உம் கல்லறை மேனியில் தந்து
புது விடியலின் நிமிர்வோடு எழுவோம்!
மீள் பதிவு (07.11.2015)
கார்த்திகை நிமிர்வோடு
தேச விடியல் சுமந்து…
எஸ்.றதன் கார்த்திகா.