அண்ணன் வளர்த்தெடுத்த அக்கினிப் பறவைகளே……!!
கார்த்திகை மாதம்
எம் காந்தள் பூ மாலைகளின்
ஊர்வலம்.………………………!!
தென்றல் காற்றிடை கலந்து வரும்
எம் சந்தனப் பேளைகளின்
பூ முகம்…………………!!
வீர வேள்வியிலே வித்தாகிப்போன
வீர மறவர்வகளே……………!!
தணியாத உம் தாகங்கள்
குருதியில் உறைந்து கிடக்கிறதா??
இல்லை! இல்லை! எம் மன
உணர்வுகளில் கலந்து தீயாய்
கொதிக்கிறதே……………!!
எமக்காக உயிர் கொடுத்தவரே!!
வேகம் கொண்டு புயல் வீசி
அடித்தாலும்…………………!!
கள தாகம் கொண்டு பாய்ந்திடும்
உங்கள் வீரத்திற்கு ஈடாகுமா..??
சரமாரி வேட்டுச் சத்தம்
வானைப் பிளந்தாலும்………!!
வீர தாகம் கொண்டு விரைந்திடும்
உங்கள் விடுதலை தீக்கு முன்நிற்குமா………………??
அண்ணன் வளர்த்தெடுத்த
அக்கினிப் பறவைகளே……!!
உம் மன உறுதி கண்டு
வியக்காதோர் யாருமில்லை……!!
உம் உறுதி தளரா வீரம் கண்டு
துளைக்கும் தோட்டா கூட
ஒருகணம் உமக்காய்
தலை சாய்த்திருக்குமல்லவா..!!
சாவைக்கண்டு அஞ்சாதவரே…!!
காலம் தான் மறுக்குமா
உம் களக் கதை படித்திட……!!
நெஞ்சம் தான் உறங்குமா
உங்கள் நினைவினை மீட்டிட……!!
வீரம் இன்னும் சோரம் போகவில்லை………………!!
நீங்கள் வளர்த்தெடுத்த
வேள்வித் தீயும் அணையவில்லை………………!!
காலம் ஓர் நாள் உங்கள்
கல்லறைக்கு பதில் சொல்லும்…!!
அன்று உம் வேதம் கொண்டு
தமிழீழம் அமைப்போம்……!!
கல்லறைகள் உயிர் பெறும்
கார்த்திகை மாதத்திலே……!!
எம் கைகளை பதித்து
சத்தியம் செய்கிறோம்……!!
உங்கள் கனவுகள் மெய்ப்பட
உம் வழி நடப்போம்……!!
உயிர் போகும் நிலையிலும்
தமிழீழம் உரைப்போம்……!!
இது சத்தியம் வீரர்களே……!!
உறவுகளே……………!!
உங்கள் குழந்தைகளுக்கும்
எங்கள் மாவீரர்களை
நினைவூட்டுங்கள் ஏனெனில்
எங்கள் குழந்தைகள் உங்களுக்காக
மாவீரர் ஆனவர்கள்……………!!
ஒரு கணம் சிந்தியுங்கள்………..!!
மலரும் சந்ததி சுதந்திரமாக
வாழ வேண்டும் என்பதற்காக
உயிரை துச்சமென நினைத்து
மானமே பெரிதென்று
வீரத்தொடு களமாடி
விடுதலை தாகத்தோடு
கல்லறையிலே துயில்கொள்ளும்
மான மாவீரர்களுக்கு
எமது வீர வணக்கம்…………!!
மீள் பதிவு (27.11.2014)
கார்த்திகை நினைவு சுமந்து
எஸ்.றதன் கார்த்திகா.