அண்ணன் வளர்த்தெடுத்த அக்கினிப் பறவைகளே……!!

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

அண்ணன் வளர்த்தெடுத்த அக்கினிப் பறவைகளே……!!

கார்த்திகை மாதம்
எம் காந்தள் பூ மாலைகளின்
ஊர்வலம்.………………………!!
தென்றல் காற்றிடை கலந்து வரும்
எம் சந்தனப் பேளைகளின்
பூ முகம்…………………!!

வீர வேள்வியிலே வித்தாகிப்போன
வீர மறவர்வகளே……………!!
தணியாத உம் தாகங்கள்
குருதியில் உறைந்து கிடக்கிறதா??
இல்லை! இல்லை! எம் மன
உணர்வுகளில் கலந்து தீயாய்
கொதிக்கிறதே……………!!

எமக்காக உயிர் கொடுத்தவரே!!
வேகம் கொண்டு புயல் வீசி
அடித்தாலும்…………………!!
கள தாகம் கொண்டு பாய்ந்திடும்
உங்கள் வீரத்திற்கு ஈடாகுமா..??
சரமாரி வேட்டுச் சத்தம்
வானைப் பிளந்தாலும்………!!
வீர தாகம் கொண்டு விரைந்திடும்
உங்கள் விடுதலை தீக்கு முன்நிற்குமா………………??

அண்ணன் வளர்த்தெடுத்த
அக்கினிப் பறவைகளே……!!
உம் மன உறுதி கண்டு
வியக்காதோர் யாருமில்லை……!!
உம் உறுதி தளரா வீரம் கண்டு
துளைக்கும் தோட்டா கூட
ஒருகணம் உமக்காய்
தலை சாய்த்திருக்குமல்லவா..!!

சாவைக்கண்டு அஞ்சாதவரே…!!
காலம் தான் மறுக்குமா
உம் களக் கதை படித்திட……!!
நெஞ்சம் தான் உறங்குமா
உங்கள் நினைவினை மீட்டிட……!!
வீரம் இன்னும் சோரம் போகவில்லை………………!!
நீங்கள் வளர்த்தெடுத்த
வேள்வித் தீயும் அணையவில்லை………………!!
காலம் ஓர் நாள் உங்கள்
கல்லறைக்கு பதில் சொல்லும்…!!
அன்று உம் வேதம் கொண்டு
தமிழீழம் அமைப்போம்……!!

கல்லறைகள் உயிர் பெறும்
கார்த்திகை மாதத்திலே……!!
எம் கைகளை பதித்து
சத்தியம் செய்கிறோம்……!!
உங்கள் கனவுகள் மெய்ப்பட
உம் வழி நடப்போம்……!!
உயிர் போகும் நிலையிலும்
தமிழீழம் உரைப்போம்……!!
இது சத்தியம் வீரர்களே……!!

உறவுகளே……………!!
உங்கள் குழந்தைகளுக்கும்
எங்கள் மாவீரர்களை
நினைவூட்டுங்கள் ஏனெனில்
எங்கள் குழந்தைகள் உங்களுக்காக
மாவீரர் ஆனவர்கள்……………!!
ஒரு கணம் சிந்தியுங்கள்………..!!

மலரும் சந்ததி சுதந்திரமாக
வாழ வேண்டும் என்பதற்காக
உயிரை துச்சமென நினைத்து
மானமே பெரிதென்று
வீரத்தொடு களமாடி
விடுதலை தாகத்தோடு
கல்லறையிலே துயில்கொள்ளும்
மான மாவீரர்களுக்கு
எமது வீர வணக்கம்…………!!

மீள் பதிவு (27.11.2014)

கார்த்திகை நினைவு சுமந்து
எஸ்.றதன் கார்த்திகா.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.