கலங்காதே அம்மா …..
காலையில் வீசிடும் தென்றலாய் …
உன் காதோரம் வருவேனம்மா ….
ஈழத்தில் மலர்ந்திடும் காந்தளில் ….
புன்னகையாய் நிமிர்வேனம்மா ….
கார்த்திகை வந்துவிட்டால் …
உன் காலடிக்காய் காத்திருப்பேனம்மா …
உன் விழி நீர் எனை நனைக்கையில் …
உனை கட்டித் தழுவி முத்தமிடுவேனம்மா …
மலர்மாலை எனை தீண்டும் போது ..
உன் ஏக்கத்தை சுவாசிக்கிறேனம்மா …
நீ ஏற்றுகின்ற நெய் தீபத்தில் ….
உயிர் பெற்று எழுவேனம்மா …..
ஏக்கங்கள் ஆயிரம் என்னுள் அம்மா …
உறக்கமின்றி கல்லறையில் கதறுகிறேனம்மா ……
விடியல் வரும் என்றே …
கண் விழித்து எழுகிறேனம்மா …
விடியும் செய்தி எப்போது நான் கேட்பேனம்மா ….
எனை நினைத்து கலங்காதே அம்மா ….
உன்னோடு என்றுமே கலந்திருப்பேனம்மா ..
உறவுகளின் உணர்வில் கலந்து …
காலத்தால் அழியாமல் எழுவேனம்மா …
ஈழப்புதல்வர்கள் விழி நீரோடு ….
எஸ். றதன் கார்த்திகா.