காம தேசக் காட்டேறி வர்க்கம்
உயிரிழந்த உடல்மீது
உணர்வைத் தேடும்
உளம் இறந்த சவங்களே
கலிகாலப் பிசாசுகளே
புகைப்படத்தை பதிந்து
பசியில் புசிக்கும்
புத்தனின் தேசத்து
சித்தம் கெட்ட சாபங்களே
கதறலில் காமம் கொண்ட
கண்ணீரில் இன்பம் கண்ட
கட்டவிழ்த்து விடப்பட்ட
காம தேசக் காட்டேறி வர்க்கமே !
சூழ்ச்சிக்கு தோற்ற இன மாதர்
தோல்களைச் சுவைபார்க்க
சொல்லிக் கொடுத்தா வந்தீர்
அல்லிக்கொடிகளின் முலையறுக்க
அழியட்டும் என்று கருவிகளை
அள்ளிக்கொடுத்த தேசத்தவரே
அங்கும் பெண்களுக்கு இப்படியெனில்
அடக்கிக்கொண்டு இருப்பீர்களா ?
மானம் உயிரென வாழும் எம்மின
மங்கையின் மார்பறுத்தவனை
யோனி சப்பித் துப்பியவனை
எப்படி மன்னிப்போம் ?
காலம் இது கலிகாலம்
கண்ணைமூடி நாம் இருக்கவில்லை
ஞாலம் பெரும் பாவம்
கருவறுக்கும் கலங்காதீர்
மிருகத்திற்கு பிறந்த மிலேச்சர்களே
பசியெடுத்தால் உம் தாயையும்
பலியெடுக்கும் வம்சமடா நீங்கள்
பார்த்துகொள் காலம் பதம் பார்க்கும்
சீழ் வடிந்து உயிர் உறையும்
நடை பிணங்களின் கதறல்கள்
நாறும் புழுக்குழியினுள்
நகர்த்தும் நாள் தொலைவிலில்லை
பாதம் பட்ட மண்ணைத்தொட்டு
பருவம் கொள்ளும் நெருப்புக்கள் கூட
பதம் பார்க்கும் உம் பாவங்களை
அன்று மரணக் கதறல்கள் மட்டுமே சிரிக்கும்
ડ . பாமினி