நாடு கேட்டது குற்றமா…!
அழுது புரண்ட கண்ணீர்
ஆறாய் ஓடியதே
நாடு கேட்டது குற்றமா
நாதியற்ற இனம் தனி நாடு கேட்டது குற்றமா
எம் ஓலங்கள் கேட்கவே ஒன்றானரே
மரண ஓலங்கள் கேட்க உலகம் ஒன்றானதோ
உடல் கிழித்து குருதி குடித்த
ஓநாய்களே உங்கள் தாகமது தீர்ந்ததோ
குருதி தாகமதும் தீர்ந்ததோ
உங்கள் காதுகளும் செவிடு தானோ
எம் மரணஓலம் கேட்ட உங்கள் காதுகளும் செவிடு தானோ
நாதியற்ற இனம் நீதியொன்றை
கேட்கிறோம்
கிழிந்த உடல் ஏராளம் குண்டுகளால்
குவிந்த பிணமாய் ஆனோம்
வடித்த கண்ணீரும் ஏராளம் ஆனாலும்
ஏதிலிகலாய் ஏளனமாய் ஆனோம் உலகத்தாரே
ஏன் இந்த பிறவி என்று நொந்த காலம் உண்டு
நொந்து வெந்து சாவதற்கு வெடித்து விட்டு சாகிறோம்
வெறி கொண்ட குள்ள நரிகளே வேங்கைகள்
ஒருநாளும் வீழ்வதில்லை
சோழன் கொற்றவைத்தேவன்