தலைவனுக்காய் காத்திருக்கும்
தமிழ்மகன்.
நந்திக்கடலே
நீ சொல்லு
நாப்படை கட்டிய
நற்றமிழர் வேந்தன்
எங்கே………!
வன்னிக்காடே
நீ சொல்லு
வாழ்வழித்த
பெருந்ததலைவன்
எங்கே………!
வங்கக்கடலே
நீ சொல்லு
வரம் தந்த
வரலாற்று நாயகன்
எங்கே……..!
முல்லைமண்ணே
நீ சொல்லு
முந்தையர் வீரத்தை
மீட்டெடுத்த
மானத்தலைவன்
எங்கே…….!
வீசும் காற்றே
நீ சொல்லு
காலம்தந்த
கரிகாலவேந்தன்
எங்கே…….!
ஓடும் முகிலே
நீ சொல்லு
உலகின் ஓரங்களெங்கும்
ஓங்கி வளர்ந்த
ஒற்றைத் தீப்பொறி
எங்கே…..!
தாய்நிலம் இங்கே
அழைக்கிறது
நீ பற்ற வைத்த
விடுதலைத்தீ
பற்றி எரிய
உனை அழைக்கிறது
நீ எங்கே
என் இதயமும்
உன் வருகையை
எண்ணி
தவமிருக்கு
நீ வந்துவிடுவாய்
என்ற என் நேசம்
நிறைவேற வந்துவிடு
தலைவா…….!
நீ வந்துவிடுவாய்
தலைவா……..!
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.