இனத்தின் முகவரி
எங்கள் அண்ணண்…!
என்ன தந்தார் எங்கள் அண்ணண்
என்று ஒருவன் கேட்பானா..?
கேட்பவன் உண்மையிலே
தமிழனாக இருப்பானா…….?
என்ன தந்தார் என்ன தந்தார்
எங்கள் அண்ணண் என்ன தந்தார்
எது எது எங்களுக்கு தேவையோ
அதுகளையே அண்ணண் தந்தார்
ஏழை பணக்காரன்
இல்லாத தேசம் தந்தார்
எதிரியிடம் இருந்து
எமைக் காவல்காத்து நின்றார்
பெருமைமிகு பெண்களுக்கு
உரிமை தந்தார்
பெண்ணடிமை
தகர்த்து பெருவெற்றி தந்தார்
பிரிவினையை போக்கி தந்தார்
பிறப்பில் பேதம் நீக்கித்தந்தார்
கருகிப்போன ஈழத்தை
களனிவயல் ஆக்கித்தந்தார்
அச்சவுணர்வு அகற்றி தந்தார்
அடிமை வாழ்வை விலக்கி தந்தார்
பிச்சையற்றோர் நாடு தந்தார்
பெருங்கடல் வணிகம் தந்தார்
இச்சை இழிசெயல் அற்ற
இளைஞர்களை
உருவாக்கி தந்தார்
பச்சைவயல் விவசாயம்
பசுமைக்காடு பெருக்கித்தந்தார்
உண்மையான ஆட்சி தந்தார்
உரிமைகளை மீட்டு தந்தார்
தமிழன் என்ற உணர்வுகளை
தரனியெங்கும் தழைக்க செய்தார்
முப்படை தந்தார்-தமிழன்
முதற்குடி என்ற திமிர் தந்தார்
எப்படையையும் எதிர்க்கும்
எமக்கொரு படை தந்தார்
தமிழ்குடிக்கோர் தனிக்கொடி தந்தார்
தனிநாடு அமைத்து தனியரசு தந்தார்
லஞ்ச ஊழலற்ற பஞ்சம் பட்டினியற்ற நிர்வாகம் தந்தார்.
சமநீதி தந்தார் சாதி சமயமற்ற
மனுநீதி தந்தார்
சண்டை சச்சரவற்ற
சாராய போதையற்ற
சமூதாயம் தந்தார்.
களங்கமில்லாத
கல்வி தந்தார்
கண்ணீர் இல்லா
வாழ்க்கை தந்தார்
இழந்த நிலங்கள்
மீளத்தந்தார்
இயற்கையை
நண்பணாக்கித் தந்தார்
தன் உழைப்பை தந்தார்
தன் உதிரம் தந்தார்
தன் உறவுகளை தந்தார்
தனக்காக வாழாது தன்னையே
தமிழர்க்காய் தமிழுக்காய் தந்தார்.
என்ன தந்தார் எங்கள் அண்ணண்
என்று ஒருவன் கேட்பானா
கேட்பவன் உண்மையிலே
தாய்த்தமிழனாக இருப்பானா…?
த.யாளன்