என் தலைவன் வருவான்.
வல்வை மண் தந்த
வரலாற்று நாயகன்
களம் பல கண்ட
புறநானூற்றுப் புதல்வன்
என் தேசத்தின் தலைவன்
பிரபாகரன் வருவான்
இரத்தவெறி கொண்ட
காடையர் கூட்டம்
இனத்தை துண்டாடும்
வேளை
இமயம் நடுநடுங்க
எரிமலையாகி வருவான்
புத்தவிகாரையும் பிக்குகளின் வருகையும்
தமிழ் நிலமெங்கும்
படையெடுக்கம் போது
வீசும் புயலின் வேகமென
என் தலைவன் வருவான்
நாள்தோறும் எங்கள் வீடுகளில்
அழுகுரல் கேட்க்கும்
நாளில்
காமக் கொடூரர்களின்
ஈனப் பார்வையால்
தமிழ் மாதரின் மானம்
பறிக்கப்படும் போது
சுழன்றடிக்கும் கனலாய்
பகையை சுட்டெரிக்க வருவான்
தாய்நிலம் எங்கும்
சிங்களம் குடியேறி
தமிழர் வாழ்வியலை
அழிக்கும் நாளில்
பெரும் படையோடு
படையெடுத்து வருவான்
தமிழீழம் வென்று
எங்கள் கையில் தருவான்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.