எங்கே இருக்கின்றார் எங்கள் தலைவன் ..?
செங்காந்தள் மலரே..!!
வெங்காட்டில் விளையாடும்
புலிகளின் பூவே!!!
எங்கே இருக்கின்றான்
எங்கள் தலைவன் ..?
எம்மிடம் சொல்லுங்களேன் ..!!!
தன்மானம் மிக்கவன்
தண்டமிழ் மாறன்
எங்கள் சுந்தரபாண்டியன் ..
கண்டால் சொல்லுங்கள்
கவின் முகம் காண ..
தவமே இருக்கின்றோம்..!!!!
கார்திகைப் பூவே..!!
கடல் சூழ் தீவே..!!
உடலும் உயிரும்
உரிமைக்காய் உகுத்த
வேங்கைகள் எங்கே..??
விளம்புங்கள் ….
அந்த வீரரை வாழ்த்த
கிளம்புங்கள் ..!!!
எழுதியவர்: ரதி