எத்தனை நாள்தான் புத்தனின் காலடியில்
புழுவாகியா கிடப்போம்…?
இப்படி இப்படியே
எத்தனை நாள் அழுவோம்
புத்தனின் காலடியில்
புழுவாகியா கிடப்போம்
எந்தையர்கள் நிலத்தை
எதிரியாள விட்டோம்
எங்களின் உரிமைகளை
எதுவரைதான் இழப்போம்
சண்டைக்கு முன்னும்
தாய் தந்தையரை இழந்தோம்
சத்தியப்போர்களிலே இளம்
சந்ததியை விதைத்தோம்
காடையர்கள் காலடியில்
கைகட்டிக் கிடந்தோம்
கண்ணீர்விட்டு கவலையோடு
மண்ணைவிட்டு நகர்ந்தோம்
புத்தியோடு ஆயுதத்தால்
யுத்தங்களை வென்றோம்
புலிவீரர் காலத்தில்
புகழோடு வாழ்ந்தோம்
கயவர்களின் துரோகத்தால்
பகைவன்
காலில் மீண்டும் வீழ்ந்தோம்.
காலம் மாறும்போது
களத்தை மீண்டும் மீட்போம்.
த.யாளன்