கனவுக்குள் ஒர் கனவு!
கனவுக்குள் ஒர் கனவு
கண்டேன் !
பெரும் படையுடன் வல்லாதிக்க படைகள்
எதிர்த்த போதும்
வங்கத்தில் அவதரித்த
சங்கத்து புலியாய்
சோரம்போகாது போரிட்ட
பெருந் தலைவனை கண்டேன்
இவன் வரலாற்றில் ஓர்
அதிசயம்
சூறாவளியே தாக்கினும்
தளராது தனித்து நிற்கும்
உறுதியான மலைச்சிகரம்
எப்படை வரினும் பிரபாவின் படை
தகர்க்கும் என உலக அரங்கில்
புரட்சியக் கோட்பாடாய்
உயர்ந்து நிற்கின்றவன்
மகனாகி
தம்பியாகி
அண்ணனாகி
தந்தையாகி
தாயாகி
குருவாகி
தளபதியாகி
தேசியத் தலைவனாகி
இறைவனாக உயர்ந்து
தமிழின் விடுதலைக்கு
தலமை தாங்கி
வழிகாட்டியாய் நிற்கின்றவன்
நாளை எதிரிகளை தோற்கடித்து
துரோகம் களைந்து
ஈழம் சமைப்பான்
கரிகாலன் எனும்
வரிப்புலித்தலைவனாய்
அதுவரை சற்று பதுங்கி கொள்வோம்
யுத்திகளை வகுத்தபடி
எதிரி படைகள் நினைத்து கொள்ளட்டும்
நாம் உறங்கி விட்டதாய்….
ஈழம் புகழ் மாறன்