குனிவினை மீட்டுக் குன்றேன நிமிர்ந்த நாடு
நம்குலம் நீடு வாழத் தன்னுயிர் ஈந்து மண்ணில் தமிழ் மறம் களத்தில் காட்டிக் கயவரை அழித்த செல்வத் திறம் கொடு
வீரர் நின்று நிமிர்வினைக் கண்ட நாடு
பல்லுயிர்ப் பாங்கொடுபடைகள் பாறி வீழ
பகை நிலை வான் கடல் காடு சூழ
பயமதை ஒறுத்து நம் பசுமை மண்ணில்
புலிப்படை நிரை சமைத்துயர்ந்த நாடு
கல்வியோடு கலையதை போற்றி நின்று
கயமையை மண்ணிடை வெற்றி கொண்டு
இன மானம் பெரிதென இணைந்து நின்று
சூழ்ச்சியில் சுயத்தினை இறவா வென்று
சுழன்ற நம் தேசத் தலைமை நாடு
கடல் நிரை படகுகள் காப்பில் நிற்க
தரை தொடும் பகைக்குலம் போரைக் கக்க
வானிடை முகிலேன வண்ணம் கொள்ள
கரும்படை கந்தகம் சுமந்தே வெல்லக்
களத்திடைக் கணையேனப் பறந்த நாடு
விலையது போகாத் திமிரைக் கொண்டு
வெண்ணிற முகிலைக் கடந்தே சென்று
குலையது நடுங்கும் பகைவர் கூட்டக் குகையது சென்று மண்ணை
குனிவினில் மீட்டுக் குன்றேன நிமிர்ந்த நாடு
கவிப்புயல் சரண்