ஈழமும் புலித்தமிழும்
வாழிய செந்தமிழ் வாழிய செந்தமிழ் வாழிய செந்தமிழே.
வாழிய செந்தமிழ் வாழிய செந்தமிழ்
வாழிய செந்தமிழே
வானினை விஞ்சிடும் உன் புகழ் தாங்கியே வாழ்ந்திடு தமிழ் மொழியே
ஈனரை ஒட்டிடு இனம் தனை காத்திடு
இனியது நம் மொழியே
இன்னிசை கலை முதல் போரியல்
புகழ் வரை தாங்கிடு தாய் மொழியே
தன்நிகர் தலை முறை நாவினில் உறைந்திடு நம்மவள் நானிலமே .
எம் மொழி சிறந்துமே ஈழத்தில் வளர்ந்திட
இயங்கிடும் யாழ் நகரே
எந்தையன் முன்னவன் வான் புகழ் தாங்கிடும் வல்லமை நல்லூரே
செந்தமிழ் காத்திட சிறுமைகள்
போக்கியே சிறந்ததும் அந்நாடே -இனி
நம் புகழ் ஓங்கிட நலம் தனை காத்திட
யாழ் நகர் நம்மோடே
தாய் நிலம் அழிவுறும் போரினை தாங்கிய
தமிழ் நிலம் முல்லையம்மா -அவள்
தன் முலை அறுந்துமே மகவுக்கு பாலினை
தந்தமை எல்லையம்மா
வல்லமை ஆண்டது வரிகளை ஈந்தது
வான் படை வென்றதம்மா
இல்லைஎனும் நிலை தொல்லை அகற்றியே எங்கணும் நின்றதம்மா
பளை நகர் தாண்டிய பயணத்தின் போதே
வளைந்திடும் இயக்கச்சி
களைப்பினை போக்கியே கனிச்சுவை தருவது எம் நிலம் கிளிநொச்சி
இரு மடு இணைந்துமே நீர் வளம் வாய்த்தது இயற்கையின் வரங்களம்மா
போர் தனை நிறுத்தவே பேச்சினை நிகழ்த்திய பொறுமையின் உச்சமம்மா
ராவணன் நிலமது தமிழினை ஈந்தது
தாய் நிலம் திரு மலையே
சிவனவன் சீறிய பெரு நகம் அமர்த்திய
புகழ் நிலம் எம் மலையே
அமிழ்ந்திடும் கடல் தனின் அலைகளில் கேட்பது அழகு கொள் சிவன் நாமம்
புரிந்திடும் மொழி தனில் புகழ் தனை கொள்வது பொங்கிடும் எம் நாதம்
ஓடிடும் வாவியில் மீன் மகள் வாழும் தேசத்தின் புகழ் நூறு
தேடிடும் வீரம் திளைத்த நம் இனத்தை
தந்தது வரலாறு
வந்து போர் ஆடிய வல்லமை எல்லாம்
வாய்த்ததும் இந்நாடே
வேவுகள் தன்னில் வெற்றிகள் தந்த வேங்கையும்அந்நாடே
ஈசனும் வந்தே இன்னருள் புரிந்திடும்
இனியதும் மன்னாரே
ஈழமும் இன்றே இருந்த நம் நிலத்தை
இழந்ததும் மணலாறே
கடந்ததும் எங்கள் கண் தனை கட்டிடும்
அழகியல் புத்தளமே
உப்பினை சுமந்திடும் கடலதன் மடியில்
உயர்ந்தது உப்பளமே
நாற்படை கட்டியே நம் தலை ஆண்டது
அழகு சூழ் நம் ஈழம்
நானிலம் காத்திடும் நம் வரி கொண்டது
நம்மவர் நிகழ் காலம்
எங்களை காத்திடும் நம் மொழி போதும்
இயங்கிடு என் நாளும்
நம் தலை போயும் தமிழ் தனை காத்திட
தரும் விலை உயிர் ஆகும்
..கவிப்புயல் சரண்…