என் இனத்தின் வலி

In தாயக கவிதைகள், முள்ளிவாய்கால் கவிதைகள்

என் இனத்தின் வலி

ஏ! வெறி பிடித்த சிங்களமே நாங்கள் கேட்கவில்லை ஆனால் கொடுத்தாய் எமக்கு அழு குரலை…. நாங்கள் கொடுக்கவில்லை ஆனால் பறித்தாய் எம் உயிர்களை…

நாங்கள் விரும்பவில்லை ஆனால் கிழித்தாய் எம் உடைகளை… நாங்கள் அடிக்கவில்லை ஆனால் அடித்துக் கொன்றாய் எம் உறவுகளை… ஆம் நாங்கள் கேட்டோம் தனி
ஈழத்தை விலை கொடுக்க வைத்துவிட்டாய் லட்சம் உயிர்களை…..

ஒரு பிடி மண்ணுக்காக ஒரு இனமே உனக்கு
தேவையா, எல்லாம் முடிந்தது என்று சிங்களம் நினைக்குதே என் சனமே இன்னும் பொருமை தேவையா….. எங்கள் குறிஞ்சி மலர்களின் குரல்வலைகளை நெறித்தாய், காந்தளிகளின் கற்பை பறித்தாய்… கை தொடும் தூரத்தில் இருப்பதினால் தான் நீயும் எங்கள் கன்னியரின் கற்பை பறித்தாயா இந்திய தேசமே…. தாயின் கண் முன்னே மகள், மகள் கண் முன்னே தாய் என்று வன்புணர்வு செய்தாயே சிங்களமே தாயென்ற உறவு உனக்கில்லையா…

பாலுக்கு ஏங்கிய குழந்தை, தாயின் முலைமார் எங்கே, முலைமார் இருக்கிறது, குழந்தை அழுகிறது, தாயின் உயிர் எங்கே…. எம் பெண்களின் பிறப்புருப்பில் துவக்கை செலுத்தினாயே,
எங்களை கருவிலே அழிக்க வேண்டும் என்பதாலா, உலகமே திரட்டி வந்து எம் முன்னே நின்றாயே , விட்டால்
தம்பி மிச்சமில்லாமல் அழித்து விடுவான் என்ற அச்சத்தாலா…

கொத்து கொத்தாய் உடல்கள் குவிய நல்லடக்கம் கூட செய்யமுடியாத நாதியற்றவர்களாய் போனோமே… மழை பொழிந்து மதகுடைந்து, வெள்ளம் நிரம்பிய எம் காணியில், இன்று குண்டு மழை பொழிந்து இரத்த வெள்ளம் போகுதே, காணியெல்லாம் இரத்த கவிச்சி வீசுதே….. உயிர்காக்க, உடமைகாக்க, உணர்வு கொண்டு

போராடிய எம் தேசத்து மாவீரர்கள் உறுப்பில்லாமல் உணர்வற்று கிடந்த நிலையில் என் உயிரையும் எடுத்துக் கொள், இனி எம் மக்களை நிம்மதியாக வாழ விடு என்று சொல்லத் தோன்றுதே…

கற்பை திருடித் திங்க வந்த அற்ப
ஓநாய் கூட்டமே, உன் கனவில் கன்னி வெடி வைக்க கரும்புலி படை வருவது நிச்சயமே, மறம் கொண்ட எம் இனம் மீண்டெழுந்தால், மதம் பிடித்த மதயானை கூட்டம்
மண்ணோடு சரியும்.. கொல்லும் போது கூட எதிர்க துணிவில்லாமல், புறங்கை கட்டி முதுகில் சுட்டாயே

கோழைச் சிங்களமே, உன் செருக்களம் அழிக்க பெருங்கலம் ஏறி வருவான் காலம் வென்ற எம் தலைவன் கரிகாலனே….. ஏ சர்வதேசமே நன்கு விளங்கி கொள்.. மே18 எங்களை புதைத்த நாள் அல்ல, எங்களை விதைத்த நாள்….

மே18 நாங்கள் அழுவதற்கு அல்ல ஆண்ட இனம் மீண்டெழுவதற்கு… மே18 புலம்புவதற்கு அல்ல இலட்சிய வெறி கொண்டு புறப்படுவதற்கு…. ஆயுதமேந்தினாலும் சரி, அறிவாயுதம் ஏந்தினாலும் சரி, ஏன் மீண்டும் உயிராயுதமே ஏந்தினாலும் சரி போராடு போராடு போராடு… ஈழம்

அடையும் வரை போராடு, தமிழனுக்கென்று நாடு வேண்டுமென போராடு , முள்ளி வாய்க்கால் முடிவல்ல என்று சொல்லிச் சொல்லிப் போராடு… தம்பி வருவான், தம்பி வருவான் என எண்ணி எண்ணி போராடு, தமிழினம் அகதி அல்ல அகதி அல்ல என்று அடங்கா வெறி கொண்டு போராடு….. போராடு போராடு போராடு என் சனமே வா
போராடலாம்

பெயர்.. ரா. வெங்கடசுப்ரமணியன்
(எ)பாலா தொலைபேசி: 8526167704

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.