இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம் முள்ளிவாய்க்கால்..!
ஈழத்தமிழீனத்தின் தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்த
அறுபது ஆண்டுகளாய் போராடிய இனத்தின் வலி சுமந்த நாள் !
வஞ்சனையாகவும் சர்வதேச இராசதந்திகளின் வஞ்சக
இராசதந்திரங்களினாலும் பல லச்சம் மக்களை
நிராயுதபாணிகளாக்கிய் படுகொலை செய்த நாள் !
தமிழீன மக்களின் நீதி மறுக்கப்பட்டு நீதியினை பறிக்கப்பட்ட நாள் !
மதத்தால் மொழியால் பண்பாட்டல் கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட
ஓர் இனக்குழுமங்களின் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட நாள் மே 18 !
சிறிலங்க என்ற அடையாளம் தரித்த அரசு
மிக மிருகத்தனமாக சர்வதேச நியமங்களை மதிக்காது
சர்வாதிரகமான முறையில் தமிழீனத்தை உயிருடன் புதைத்த நாள் !
தேசம், தேசியம். தேசியக்கொடி, தேசியத்தலைவன் என்ற அந்த
சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு
தேசத்தின் நிழல்கள் இனவெறி அரசின்
வெறித்தனமான தாக்குதலில் வாழ்வின் முடிவை எண்ணிய நாள்!
வாழ்க்கையின் வழியிலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலும்
பெரியவர்கள் பெண்கள் சிறார்கள் என ஒர் இனம் சந்திக்கும்
அனைத்துத் துயரங்கள் குவிந்த நாள் மே 18 !
ஈழத்தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க
இடமின்றி, சிறிது நேரம் கூட இளைப்பாற முடியாமல் துரத்தி, துரத்திக்
விமானக் குண்டு வீச்சு, பல்குழல் பீரங்கிகள்,கொத்தனிக் குண்டுகள்
இரசாயனக் குண்டுகளால் உடலங்கள் சீர்ரழித்து சிதறி வீசப்பட்ட நாள்!
இது கதையோ, கற்பனையோ அல்ல எம் இன அழிப்பின் உண்மை
இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம் ஆகிய நாள்!
„எந்த ஏக்கத்துடன் எமது மாவீரர்களும் பொது மக்களும் மாண்டார்களோ
ஆதை நிறைவேற்றுவதே இன்றைய தமிழ் மக்கள் அவர்களுக்கு செய்யும்
ஆத்மார்த்தமான அஞ்சலி ஆகும்”